Skip to main content

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு: நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது
அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பை3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட செவிலியர் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
இவற்றில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

அவர்கள் 3 ஆண்டு படிப்பு மற்றும் 6 மாதம் மருத்துவமனையில் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில் மூன்றரை ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்ஸிங் படிப்பை 3 ஆண்டாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் (ஐஎன்சி) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழும (நர்ஸிங் கவுன்சில்) பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள செவிலியர் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ நர்ஸிங் படிப்பு 3 ஆண்டாக இருந்தது. இந்த 3 ஆண்டுகளிலேயே படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைந்து இருந்தன. அதன்பின் 3 ஆண்டு படிப்பு, 6 மாத பயிற்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைத்து டிப்ளமோ நர்ஸிங் படிப்பை 3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இருந்து இதை நடைமுறைப்படுத்துமாறு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. 

தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவதில்லை. தனியார் செவிலியர் பள்ளிகளில் நிர்வாகமே மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்கின்றனர்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.சிதம்பரம் கூறியதாவது:10 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டது. அப்போது தனியார் பள்ளிகள் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 200-க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அதனால் அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

இந்த கலந்தாய்வில் தனியார் செவிலியர் பள்ளிகளையும் சேர்க்கக்கோரி அரசிடம் பல முறை முறையிட்டோம்.அதன் பலனாக தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும், தனியார் செவிலியர் பள்ளிகள் மாநில அரசுக்கு 65 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து தனியார் செவிலியர் பள்ளிகளிடம் இருந்தும் மருத்துவக் கல்வி இயக்ககம் விவரங்களை கேட்டு வாங்கியது. ஆனால் இந்த ஆண்டும் அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தனியார் செவிலியர் பள்ளிகளையும் சேர்த்தே கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு