Skip to main content

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வு
இயக்ககம் தெரிவித்தது.
இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வுகள் உள்பட) தேர்வு முடிவை, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த இணையதள முகவரிக்குள் சென்றவுடன் "Provisional Mark Sheet HSC Result- June 2015' என்ற "Screen' தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்ய வேண்டும். மேலும், திரையில் தோன்றும் குடியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே தட்டச்சு செய்ய வேண்டும். அதையடுத்து "View Result' Gu\ "Option'-ஐ கிளிக் செய்ய வேண்டும். அப்போது தேர்வர்கள் பெயரில் PDF File  பதிவிறக்கம் ஆகும். மேற்கண்ட கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை தேர்வர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

விடைத்தாள், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: 2015-ஆம் ஆண்டு தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 20.7.2015 முதல் 22.7.2015 வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் இணையதள பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ ரொக்கமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கு பகுதி-1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு தலா ரூ.550-ம், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதேபோல, மறு கூட்டலுக்கு பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்), உயிரியல் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305-ம், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும்- ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் எப்போது? விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைப் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Applicaion Number)-ஐ பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத் தாள்களின் நகல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், மறு கூட்டல் பற்றியும் அறிய முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு