Skip to main content

பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு


நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள்,
தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

அவரின் உத்தரவு விவரம்:


* மாணவ, மாணவியர் தங்கள் பெயர், இன்ஷியல், தந்தை அல்லது காப்பாளர் பெயர், பிறந்த தேதியை தெளிவாக குறிப்பிட வேண்டும். 

* உறுதிமொழி படிவத்தில் உள்ள விவரங்கள் தான், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இடம் பெறும் என்பதால், பிறப்புச் சான்றிதழ் படி, சரியான தகவல்களை குறிப்பிட வேண்டும். 

* உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல்கள் குறிப்பிட்டால், சட்டரீதியான பிரச்னை ஏற்படும் என்பதை, தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

* மாணவரின் பாலினம், முகவரி, ஜாதி சான்றிதழ் அடிப்படையிலான ஜாதி விவரம், மதம், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான குறைபாடு, தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தாய் பெயர், ஆதார் அடையாள அட்டை எண் விவரம், ரேஷன் அட்டை எண் விவரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மொபைல்போன் எண் (விரும்பினால் மட்டும்), பாடங்களின் விவரம், தட்டச்சு முடித்திருந்தால் அதன் விவரம், போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

* வரும் 27ம் தேதி முதல், இந்த பணிகளை துவங்கி, ஆக., 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு