Skip to main content

ஜூலை 29 முதல் ஆக.18 வரை கலந்தாய்வு நடத்த கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.இந்த நிலையில், 
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நிறைவடைகிறது. 

கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:

மேல்நிலைப்பள்ளி

*ஜூலை 29 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பணி மாறுதல்.


*ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.

*ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).

*ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

*ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).

*ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசைஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

*ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) - பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.

இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்