Skip to main content

ஐந்தாண்டு சட்டப் படிப்பு: ஜூலை 20 முதல் 23 வரை கலந்தாய்வு


இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை
சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்மையில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
 அதைத் தொடர்ந்து இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
 இந்த நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது.
 அதன்படி, கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் ஓ.சி. பிரிவினருக்கு சேர்க்கை நடைபெறும். 
 தொடர்ந்து 21- ஆம் தேதி எஸ்.டி., எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 22-ஆம் தேதி எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினருக்கும், 23-ஆம் தேதி பி.சி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன