Skip to main content

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுன் ரூ.18,864 -க்கு விற்பனை - விலை நிலவரம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுன் ரூ.18,864 -க்கு விற்பனை - விலை நிலவரம்
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்து, புதன்கிழமை ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,864-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் நிலவிய மாற்றத்தால், நிகழாண்டில் ஜனவரி
முதல் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாகவே காணப்பட்டு வந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வந்தது. ஜூன் மாதத்தில், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

அதன் பின்னர், தங்கம், வெள்ளி விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில், ஜூலை மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சரிவைக் கண்டு வருகிறது. திங்கள்கிழமையன்று, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்து, ரூ. 19,216-க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.136-ம், புதன்கிழமை 216-ம் குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.608 வரை குறைந்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், ஐரோப்பிய பங்கு சந்தையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக, 1,225 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், புதன்கிழமை 1,092 டாலர்களாக குறைந்தது. இதுவே பிரதான காரணமாகும்.

பொதுவாக, ஆடி மாதத்தில் தங்கத்தின் தேவை குறைவாக இருப்பதால், அவற்றின் விலை குறைந்திருக்கும். அந்த மாதத்தின் 2-ஆவது வாரத்திலிருந்து, மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கும். இதே நிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அடுத்து வரும் நாள்களில், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

 புதன்கிழமை  விலை நிலவரம் (ரூபாயில்)
 ஒரு கிராம் தங்கம் 2,358
 ஒரு பவுன் தங்கம் 18,864
 ஒரு கிராம் வெள்ளி 36.20
 ஒரு கிலோ வெள்ளி 33,825
 செவ்வாய்க்கிழமை 
 விலை நிலவரம் (ரூபாயில்)
 ஒரு கிராம் தங்கம் 2,385
 ஒரு பவுன் தங்கம் 19,080
 ஒரு கிராம் வெள்ளி 36.40
 ஒரு கிலோ வெள்ளி 34,030

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு