Skip to main content

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்


தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது
கவுன்சிலிங், நாளை முடிகிறது.

மொத்தமுள்ள, 2 லட்சத்து, 5,000 இடங்களில், நேற்று வரை, 94 ஆயிரம் இடங்கள் நிரம்பின.தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. அது முடிந்து, காலியாக இருக்கும் இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ல் நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 துணைத் தேர்வில், வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள், இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அனைத்து சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, 'https://tnea.annauniv.edu/tnea2015/press.php' என்ற, அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்