Skip to main content

யோகா தினம் குறித்து எந்த உத்தரவும் அளிக்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்

யோகா தினம் குறித்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 
யோகா என்பது இந்து மதம் சார்ந்தது என்ற விமர்சனத்தால் யோகா தினக் கொண்டாட்டங்கள் சர்ச்சையாகி வருகின்றன. எனினும்
மத்திய அரசு யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் யோகா தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசிட மிருந்து யோகா தினம்கொண்டாடு வது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டால் அந்தந்த மாவட்டங்களில் யோகா தினம்கொண்டாடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும் 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள 284 மாநகராட்சிப் பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடுவதற்கான உத்தரவுகள் எதுவும் தரப்படவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “மாநகராட்சிப் பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடுவது தொடர்பாக மாநகராட்சியோ, தமிழக அரசோ எந்த உத்தரவும் அளிக்கவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏதாவது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்”என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு