Skip to main content

கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்


ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கருவூலத்துறை அறிவிப்பால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், த
ங்களது ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஜூலை மாத சம்பளப் பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.
இதனால், அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிராக விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால்தான் ஜூலை மாத சம்பள பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கருவூலத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், பதில் அளிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட கருவூல அதிகாரியை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 24) மாவட்ட கருவூலம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன