Skip to main content

'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்


தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் குறைகளை தீர்க்க 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' மதுரை மண்டல அலுவலகத்தில் ஜூலை முதல் துவக்கப்படுகிறது.தொழிலாளர் குறைகளை தீர்க்க வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 'பவிஷ்ய நிதி அதாலத்' நடத்தப்பட்டது. நிறுவனத்தில் தொழில்
நிறுவன உரிமையாளர்களும் முக்கிய பங்கீட்டாளர்களாக உள்ளனர். தொழிலாளர் மட்டுமின்றி உரிமையாளர்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், பவிஷ்ய நிதி அதாலத்தை 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இதில் தொழிலாளர்கள்,முதலாளிகள் குறைகளுடன் கருத்துக்களை தெரிவிக்கலாம். மதுரை மண்டல அலுவலகத்தில் 2015 ஜூலை முதல் இத்திட்டம் துவக்கப்படுகிறது. மாதம்தோறும் 10ம் தேதியில் (அன்று விடுமுறை என்றால் மறுநாள்) முகாம் நடக்கும். அன்று காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர்கள்; மதியம் 3 முதல் மாலை 4 மணி வரை முதலாளிகள்; மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம். தொழிலாளர்கள், முதலாளிகள் கருத்துக்களை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு