Skip to main content

'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்


தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் குறைகளை தீர்க்க 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' மதுரை மண்டல அலுவலகத்தில் ஜூலை முதல் துவக்கப்படுகிறது.தொழிலாளர் குறைகளை தீர்க்க வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 'பவிஷ்ய நிதி அதாலத்' நடத்தப்பட்டது. நிறுவனத்தில் தொழில்
நிறுவன உரிமையாளர்களும் முக்கிய பங்கீட்டாளர்களாக உள்ளனர். தொழிலாளர் மட்டுமின்றி உரிமையாளர்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், பவிஷ்ய நிதி அதாலத்தை 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இதில் தொழிலாளர்கள்,முதலாளிகள் குறைகளுடன் கருத்துக்களை தெரிவிக்கலாம். மதுரை மண்டல அலுவலகத்தில் 2015 ஜூலை முதல் இத்திட்டம் துவக்கப்படுகிறது. மாதம்தோறும் 10ம் தேதியில் (அன்று விடுமுறை என்றால் மறுநாள்) முகாம் நடக்கும். அன்று காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர்கள்; மதியம் 3 முதல் மாலை 4 மணி வரை முதலாளிகள்; மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம். தொழிலாளர்கள், முதலாளிகள் கருத்துக்களை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன