Skip to main content

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்


தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு:இதன்படி, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 105
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விரைவில் ஆய்வு நடக்கிறது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், அரசு பள்ளிகள், மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடப் பள்ளிகள் என, பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிக்க தமிழக கல்வித்துறையில் தனியாக ஒரு பிரிவு இல்லை.

அனுமதி:தாங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், தமிழக கல்வித்துறை கண்காணிக்க முடி யாது என்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூறி வந்தன. ஆனால், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு, கல்விக் கட்டணம் போன்ற வற்றை, மாநில அரசே கண்காணிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும், நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, இதுகுறித்து விசாரித்து, அனைத்து சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் அதிகாரத்தை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

'நோட்டீஸ்':இதனால், அங்கீகாரம் பெறாத சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. 105 பள்ளிகள் அங்கீகாரம் கோரி, பள்ளிக் கல்வித்துறையிடம் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் குறித்து, கல்வி அதிகாரி கள் மூலம், பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்து, அனுமதி வழங்குவது குறித்து கல்வித்துறை முடிவு செய்ய உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு