Skip to main content

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துவருவதால், தனியார் கல்வி நிறுவனங்கள் பல மூடுவிழா நடத்த தயாராகி வருகின்றன.தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்ட
ய பயிற்சி நிறுவனம், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனம், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம்என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்ப பள்ளிகளில் சிறுவர்களுக்கு
பாடம் கற்பிக்க ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களை நியமனம் செய்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இவர்கள் பாடம் நடத்த நியமிக்கப்பட்டனர். 

இதனால் ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதால் பெண்கள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தனர்.இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி பள்ளியை துவக்க அனுமதியளிக்கப்பட்டது. தற்போது நிலைமை தலைகீழாக மாறியது. அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 3 வயது முடிவதற்கு முன்பே தனியார் "பிளே' ஸ்கூலில் சேர்க்கின்றனர். அதைத்தொடர்ந்து மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி., என பள்ளிகளில் தொடரும் நிலை உள்ளது. பெரும்பாலான குழந்தைகள் அரசு ஆரம்ப பள்ளிக்கு வருவது வெகுவாக குறைந்துவிட்டது.மேலும் தமிழக அரசு இதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் 5ம் வகுப்புக்கு மேல் பாடம் நடத்தக் கூடாது என உத்தரவை போட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அரசு பள்ளியில் ஏற்படும் காலிப் பணியிடம் கணிசமாக குறைந்து விட்டது.

வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டதாலும் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை.இதன் காரணமாக கடந்த ஆண்டில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவ மாணவியர்கள்சேர்க்கை இல்லாமல் 400 பள்ளிகளை நடத்த முடியவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாமல் மூடும் அபாயத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதேப்போன்று 10 பள்ளிகளில் முதலாமாண்டு சேர்க்கையே இல்லாமல் உள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் மட்டுமே படித்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.நடப்பு ஆண்டிற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. விண்ணப்பம் செய்த அனைத்துமாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் முடிந்த பின்னர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை குறித்து தெரியவரும்.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் பல பள்ளிகள் மூடுவிழா நடத்த தயாராக உள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு