Skip to main content

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாகதீர்ப்பளித்
துள்ளது
.கடந்த மே மாதம் 5ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 6.3 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பு சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பளித்துள்ளது.

அதில் கடந்த மே மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்றும்,அடுத்த நான்கு வாரத்திற்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் ஒரு மாணவர் முறைகேடாக பயனடைந்தாலும் தவறுதான் என நீதிபதிகள் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்தனர்.​

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்