Skip to main content

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால்,
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

ஒப்பந்தம்:இதனால், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், அதிகரித்து வந்த கம்ப்யூட்டர் பாடப்பிரிவு, தற்போது அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வந்துவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, சிறப்பு தேர்வுமூலம் நிரந்தரமாக்கிய நிலை யில், கடந்த ஆண்டு, பி.எஸ்சி.,- -பி.எட்., படித்த ஆசிரியர்களை, சீனியாரிட்டி அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியராக தமிழக அரசு நியமித்தது.

மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, வாரத்துக்கு, 28 பாட வேளைகள், இவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இத்துடன் அலுவலக பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், கல்வித்துறை அலுவலகத்திலிருந்து, கடிதம் அனுப்புவது, பதில் பெறுவது, தகவல்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, பொதுத் தேர்வுக்கான பட்டியல் தயாரிப்பது, மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை பெற்றுத்தருவது, நலத்திட்ட உதவிகள் குறித்த கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும், அலுவலக உதவியாளர்கள் பார்த்து வந்தனர்.ஆனால், சமீப காலமாக இந்த பணிகள் அனைத்தும், ஆன்லைன் மயமாகிவிட்டது.

இந்த பணிகளில் தவறுகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கொண்டே செய்யப்படுகிறது.இதற்கு, உயர் அலுவலர்களும் நிர்பந்தம் செய்வதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.கூடுதல் பணிஇதுகுறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில், பெரும்பாலான பள்ளிகளில், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது.இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஆன்லைன் பணிகளை, பாட வேளைகளையும் பார்த்துவிட்டு, கூடுதலாக செய்து வந்தனர். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்நிரப்பப்பட்டுவிட்டது. ஆனாலும், அலுவலக பணிகளை, கம்ப்யூட்டர் ஆசிரியர்களிடமே ஒப்படைத்து வருகின்றனர். மற்ற ஆசிரியர்களை போன்றே, அதே அளவுக்கு வகுப்புகளும் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள நேரத்திலும், பள்ளி முடிந்த பின்பும், அலுவலக பணிகளை பார்க்க வேண்டியுள்ளது.மற்ற ஆசிரியர்கள் பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்பும் நிலையில், நாங்கள் வீடு திரும்ப, இரவாகிவிடுகிறது.

மிரட்டல்:இப்பணிகளில் ஏதேனும் குறை வந்துவிட்டாலும், அதற்கும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.கல்வித்துறை அலுவலகத்தில் குறைகளை தெரிவித்தாலும், 'நீங்கள் தான் செய்ய வேண்டும், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்துக்கு ஏராளமான ஆட்கள் உள்ளனர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி மட்டுமல்ல, கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட ஆசிரியர் பணிக்கும், மாதம், 5,000 சம்பளத்தில் கூட, ஏராளமான ஆட்கள் கிடைக்கும் நிலையில், அவர்களுக்கு இதுபோன்ற மிரட்டல் விடுக்க முடியுமா? அலுவலக உதவியாளர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களே செய்யும் நிலை, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலர் மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு