Skip to main content

சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுமத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5–ந்தேதி நடந்தது. இதில் நாடெங்கும் 6½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், கேள்வி
த்தாளும் அதற்கான பதில்களும் முன் கூட்டியே வெளியானதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் தேர்வை ரத்து செய்வதாகவும் 4 வாரத்துக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்வு நடத்த கால அவகாசம் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் ஆகஸ்ட் மாதம் 17–ந்தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்து முடிவுகளை வெளியிட கால அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா