Skip to main content

சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுமத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5–ந்தேதி நடந்தது. இதில் நாடெங்கும் 6½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், கேள்வி
த்தாளும் அதற்கான பதில்களும் முன் கூட்டியே வெளியானதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் தேர்வை ரத்து செய்வதாகவும் 4 வாரத்துக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்வு நடத்த கால அவகாசம் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் ஆகஸ்ட் மாதம் 17–ந்தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்து முடிவுகளை வெளியிட கால அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு