Skip to main content

வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை: வருமானவரி இலாகா எச்சரிக்கை


அண்மையில் டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தேசிய மாநாடு நடந்தது. இதில் வருமான வரி இலாகாவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு மத்திய நேரடி வரிகள்
வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் தொடர்ந்து ஏரி ஏய்ப்பு செய்வோர் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான உத்திகள் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கடந்த நிதியாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி இலாகாவினர் திடீர் சோதனை மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அப்போது ஏறக்குறைய 100 பேர்(10 சதவீதம்) வரை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வருமான வரி இலாகா நோட்டீசு அனுப்பிய பிறகும் ஏராளமானோர் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பதும், அவர்கள் வருமான வரி செலுத்தாமல் தப்பிக்க தங்களுடைய முகவரியை மாற்றிக் கொள்வதும், தங்களது வருமான ஆதாரத்தை மறைப்பதும் தெரிய வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இது பற்றி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் கூறியதாவது:-

கருப்பு பணத்தை கண்டுபிடிக்க மத்திய அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செலுத்தப்படாத வரி மற்றும் அபராதம் போன்றவற்றை பெறுவதில் வருமான வரி இலாகா தனது வழக்கமான உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. இப்பிரச்சினையை கோர்ட்டு வரை கொண்டு செல்கிறது.

வரி நிர்வாகத்தை பொறுத்தவரை இதுபோன்று தலையிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதே நேரம் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எங்களுக்கு சோதனையிடவும், வருமான வரிச் சட்டத்தின்படி சொத்துகளை பறிமுதல் செய்யவும் அதிகாரம் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில் சில வழக்குகளில் எங்களுடைய அதிகாரத்தை காட்ட வேண்டியும் உள்ளது.

நீண்டகாலமாக வரி ஏய்ப்பு செய்வோரிடமிருந்து அபராதத்தையும், செலுத்தப்படாத வரியையும் பெற மட்டுமே நாங்கள் விரும்புவதில்லை. அதைச் செய்வது மட்டுமே எங்களுடைய நோக்கமும் அல்ல. இது போன்றதொரு முறையில் வரி ஏய்ப்பு செய்பவர் எளிதான தண்டனையோடு தப்பிட விட வாய்ப்பு இருக்கிறது.

எனவே தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்வோர் மீது வழக்கு தொடர சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு