Skip to main content

பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்


பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவி
னருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.


இவர்களுக்கென மொத்தம் 5,136 பி.இ. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக 219 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் குறைவானவர்களே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மீதமுள்ள 4,900-க்கும் அதிகமான இடங்கள், பொதுப் பிரிவு கலந்தாய்வு இடங்களில் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அதற்கு அடுத்த நாள் முதல் காலை 7.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். 8 ஆவது பிரிவு மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். 
பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.
பின்னர், பிளஸ் 2 தொழில் பிரிவின் கீழ் படித்து பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு