Skip to main content

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்


பருவகால மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது "இன்ஃப்ளூயன்சா' வைரஸ் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்
மருத்துவர் பாலச்சந்திரன் பேசியது:
ஃப்ளூ வைரஸ் எனும் இன்ஃபுளூயன்சா வைரஸ் மூக்கு, தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுநோயாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை விட குழந்தைகளிடேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், 10 மாதங்களில் மட்டும் உலக அளவில் 4 முதல் 6 வயது உடைய குழந்தைகள் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சிறுநீரகம், நுரையீரல், ரத்தமண்டலம் உள்ளிட்டவற்றை வெகுவாக பாதிக்கக் கூடியது.
தும்மல், இருமல், பேசும் போதும் காற்றுமூலம் பரவுகின்ற இந்த வைரஸ் பாதிப்பால், அதிக காய்ச்சல், தசை வலி, குளிர் நடுக்கம், களைப்பு, திடீர் தூக்கம், நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பருவகால மாற்றத்தின் போது இந்த வைரஸ் அதிக அளவில் நோய்த் தொற்றை ஏற்படுத்துவதால், இன்ஃபுளூயன்சா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தவுடன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வட இந்திய மாநிலங்களில் தற்போது இதன் அறிகுறிகள் தொடங்கியுள்ளன. எனவே இன்ஃபுளூயன்சா வைரஸ் தொற்றை தவிர்க்க தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு