Skip to main content

அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம்


ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசின் முழு செலவில், தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் துவங்கின. ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, தனியார் பள்ளிகளி
ல் சேர்க்கும் திட்டத்தை, அத்துறை, ஆறு ஆண்டாக செயல்படுத்தி வருகிறது.


இதில், 6ம் வகுப்பு; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என, இரு பிரிவு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 385 வட்டாரங்களில், அரசு பள்ளிகளில், 5ம் வகுப்பு படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், தலா ஒருவர் வீதம், தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு செலவில் படிக்க வைக்கப்படுவர். பிளஸ் 2 வரை, இவர்களுக்கான முழுச் செலவையும் அரசு ஏற்கும்.

திட்டத்தின் மற்றொரு பிரிவாக, அரசு பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், மாவட்டத்திற்கு, 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர். அவர்களை சிறந்த தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்த்து, கல்வி செலவு அனைத்தும் அரசு ஏற்கிறது. இதற்காக, ஆண்டிற்கு, 1.80 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான தேர்வு தற்போது துவங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எல்லா மாவட்டங்களிலும் தேர்வு முடிந்ததும், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'அட்மிஷன்' நடைபெறும்' என்றார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா