Skip to main content

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கி வரும் விடுதிகளில், நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த விடுதிகளில் சேர விரும்பும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், இதர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுதிகளில் சேர, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும், விடுதிக்கும் இடையே 5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் (இது மாணவிகளுக்குப் பொருந்தாது). மேலும், இந்த விடுதிகளில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
தகுதியான மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று ஜூலை 7-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு