Skip to main content

பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி


நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்
, மத்திய அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுககும் யோகா கட்டாய பாடமாக்கப்படும். யோகா பாடத்தில் 80 மதிப்பெண்கள் செய்முறை தேர்வு மூலம் வழங்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது.

இதற்கான பாடத்திட்டங்கள் தயாராகி வருவதாகவும் யோகா கலையில் இளங்கலை, முதுகலை, பட்டப்படிப்பு மற்றும் பட்டைய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் யோகா செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான யோகா போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்தார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா