Skip to main content

உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு

உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலியில் மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்பதால், பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் பகிருங்கள். அவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரீட்வீட் (பகிர்தல்) செய்வேன். மோடி விடுத்த 'மகளுடன் செல்ஃபி' அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் இட்டு, பெற்றோர் பலரும் தங்கள் மகள்களுடனான புகைப்படங்களைப் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.அவற்றில் பலவும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பிரச்சார உத்திக்கு ட்விட்டரில் படுவேகமாக வரவேற்பு கிடைத்தது.நிமிடத்துக்கு 20-க்கும் மேற்பட்ட போஸ்டுகள் பகிரப்பட்டதன் விளைவாக,
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நீண்ட நேரம் நீடித்தது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு