Skip to main content

மருத்துவ படிப்பு: சேர்க்கைக் கடிதம் எப்போது கிடைக்கும்?


எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைப் பெற்ற மாணவர்கள், தங்களுக்கான சேர்க்கைக் கடிதத்தை இன்று 11 மணி முதல் கலந்தாய்வு நடைபெற்ற
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு குறித்து இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்று இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து, இதுவரை கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தீர்ப்பு வெளியானதை அடுத்து, இன்று முற்பகல் 11 மணி முதல், சேர்க்கைக் கடிதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோன்று 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கிய எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) முடிவுக்கு வந்தது.
இதில் பங்கேற்று சேர்க்கை பெற்றவர்கள், அவர்களுக்கான சேர்க்கைக் கடிதங்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும்5, மாலை அல்லது இரவு நேரத்தில் வந்தாலும் சேர்க்கைக் கடிதம் எந்த வித இடைநிறுத்தமும் இல்லாமல் எந்த நேரமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா