Skip to main content

இளம் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை

இளம் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று நவீன ஆராய்ச்சி உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக இளம் பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக்
குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

இந்திய ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும்.


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர், 2015 ஜூன் 1 ஆம் தேதியன்று 40 வயதை மிகாதவராகவும், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பணிபுரியும் நிரந்தர பேராசிரியராகவும் இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அல்லது டீன் அல்லது கல்லூரி முதல்வர்கள் மூலம் மட்டுமே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 விண்ணப்பிக்கும் பேராசிரியர் முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆராய்ச்சி படிப்பையும் (பிஎச்.டி.) முடித்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு அதிகபட்சம் 12 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அங்குள்ள கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நவீன ஆராய்ச்சி உத்திகள், தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்காக மாதம் ரூ. 1.80 லட்சம் ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு