Skip to main content

பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? : சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு


பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, சமூக நலத்துறையில், எழுத்தர், அலுவலக உதவியாளராக பத
வி உயர்வு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. 2010ல், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர்களில், பெண்களுக்கு, இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்; ஆண்களுக்கு அலுவலக உதவியாளராக பதவி உயர்வு தரப்படும் என்றும் கூறப்பட்டது.

இதில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்க மாநில தலைவர் வரதராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றார். இதையடுத்து, குளறுபடிக்கு தீர்வு காண, 2011 பிப்ரவரி, 28ம் தேதி, நால்வர் குழு அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த குழு தீர்வுக்கான எந்த முயற்சியும் எடுக்காமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பதவி உயர்வும் அறிவிப்பாகவே உள்ளது. இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறுகையில், 'நால்வர் குழு எங்கே இருக்கிறது என, தேடும் நிலை உள்ளது. குழுவுக்கு புத்துயிர் அளித்து, சிக்கலுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்' என்றனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு