Skip to main content

எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு


அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., போன்ற முதுகலைப் படிப்பு
களில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நுழைவுத்தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியானது. நாளை முதல், 'ஆன் - லைனில்' மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதுகலை இன்ஜி., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்கலாம்.
ஆன் - லைனில் பதிவு செய்யும் தகவல்களை பதிவிறக்கம் செய்து, வங்கி வரைவோலையுடன், 'தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை' என்ற முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/tanca2015/ இணைப்பில் பெறலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு