Skip to main content

பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்

பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்: மத்திய அரசு திட்டம்


டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும் ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின்கீழ் வரும் ஜூலை 1-ம் தேதி இ-பாஸ்டா (ebasta) எனும் புதிய திட்டத்தை செயல்படு
த்தவுள்ளது. இந்த திட்டத்தின் படி என்.சி.இ.ஆர்.டி.(NCERT) பாடநூல்கள் முதல் சில மாநிலங்களின் மொழிப்பாட நூல்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அரசு அறிவிக்க உள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-பாஸ்டா திட்டம் என்பது பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றாகும். ஆதலால், இந்த திட்டத்தை செயல்படுத்துதல், நடைமுறைக்கு கொண்டுவருவதில் பிரதமர் அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதில் இ-பாஸ்டா ஆப்ஸ் மூலம், பள்ளிப்பாடநூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். செயல்முறை தேர்வுக்கான வீடியோக்கள், பாடங்களுக்கான ஆடியோ பைல்களையும் பதிவிறக்கம் செய்து செல்போன், டேப்ளட், கணினிகளில் சேமிக்க முடியும். குறிப்பாக எதிர்காலத்தில் மாணவர்களின் புத்தகச்சுமையை பெருமளவு இது குறைக்கும் என்றார். டிஜிலாக்கர் போர்டல் குறித்து அந்த அதிகாரி கூறுகையில், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ள எவரும் டிஜி லாக்கர் போர்டலில் உறுப்பினராக சேர்ந்து இதன் வசதியை பயன்படுத்தமுடியும். பள்ளி சான்றிதழ் முதல், பான்கார்டு, வாக்காளர் அட்டை, என அனைத்து சான்றிதழ்களையும் இந்த போர்டலில் பாதுகாக்க முடியும். மேலும், இதை எந்த அரசு அலுவலகத்திற்கும் இ மெயில் மூலம் எளிதாக அனுப்பலாம். இந்த போர்டலில் இணைந்தவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அரசு சான்றிதழ்களும் இந்த போர்டல் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் போலி சான்றிதழ் உருவாவதை தடுக்க முடியும் என்றார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு