Skip to main content

ஆன்-லைன் முறையில் சம்பளம் விரைந்து பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.

ஆன்-லைன்' முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், உடனடியாக விடுபட்டுள்ள ஆசிரியர்களின் விபரங்களை பதிவு செய்ய தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், நடப்பு மாதம் முதல் ஆசிரியர்களு
க்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் ' இ-பே -ரோல்' எனும் முறையில், ஆன்-லைனில் வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களின் விபரங்களை, குறிப்பிட்ட வலைதளங்களில், பதிவு செய்யும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு வழங்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களின் தகவல்கள் சமர்ப்பிக்கப்படாததால், ஆன்-லைன் முறையில் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, விடுபட்டுள்ள அனைத்துஆசிரியர்களின் விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விபரங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருப்பின்அதனையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா