Skip to main content

'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு


பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்
பத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில், 7,200 பொது இ - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை, கூட்டுறவுச் சங்கங்கள், 'எல்காட்' நிறுவன மாவட்ட மையங்கள், அரசு கேபிள், 'டிவி' மையங்கள், மற்றும் 2,000 வறுமை ஒழிப்பு மையங்கள் நிர்வகித்து வருகின்றன. இ - சேவை மையங்களில், வருவாய் மற்றும் சமூகநலத் துறையால் வழங்கப்படும், சாதிச்சான்று, வருமானச் சான்று, பட்டதாரி அல்லாத சான்று, திருமண உதவித் திட்டங்களுக்கான சான்று உட்பட, 11 சேவைகளுக்கு, பொதுமக்கள், ஆன் - லைனில், மனு செய்து பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், தாலுகா அலுவலகங்களில், அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
இந்த மையங்களில், ஜூலை மாதம் முதல், மேலும் நான்கு சேவைகளை சேர்க்க, அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்
களுக்கான சான்று, வாரிசு சான்றுகளை, ஆன் - லைனில் மனு செய்து பயனடையலாம். இதுதவிர, துயர் துடைப்பு நிதியை பெற விரும்புவோரும், மனு செய்யலாம். நான்கு சேவைகளை சேர்ப்பதற்கான பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவர்கள், அதற்கான சாப்ட்வேரை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு