Skip to main content

நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு அறிவிப்பு
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகைய சிறுபான்மையினருக்காக மத்
திய-மாநில அரசுகள் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.        

அரசுகள் வழங்கும் இந்த பயன்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் ‘சிறுபான்மையினர் சான்றிதழ்’ அவசியமாக இருந்தது. இது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சான்றிதழ் இல்லாததால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள், உதவிகளை பெற முடியவில்லை என சிறுபான்மையினர் ஏராளமான புகார்களை கூறி வந்தனர். குறிப்பாக ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி புகார் அளித்தனர்.         

இதைத்தொடர்ந்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், இந்த பிரச்சினையில் நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, ‘அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு சிறுபான்மையினர் சான்றிதழ் அவசியம் இல்லை. மாறாக சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் மட்டும் போதுமானது’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.   
      
முன்னதாக சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் பெறுவதற்கு வழங்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும், கடந்த ஆண்டு மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. சாதி சான்றிதழ் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவரின் சுய கையொப்பமிடப்பட்ட சான்றே போதுமானது என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறுபான்மையின மக்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு