Skip to main content

இன்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் அசத்தல்

 சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும்
முதலிடம் பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. 
*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
 * தர வரிசையில், கோவை, சூலுாரைச் சேர்ந்த கீர்த்திபாலன், முதலிடம் பெற்றுள்ளார். இவர், திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளி மாணவர். *சாதனை நிகழ்த்திய நிஷாந்த் ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவின்குமார், மோனிஷ், மோகன்குமார் மற்றும் ராம் அஸ்வந்த் ஆகிய எட்டு பேர் மருத்துவ தர வரிசை பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளனர்; மருத்துவம் படிக்க உள்ளனர். 
*அவினாசி வெள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கிரிதரன், ஈரோடு குருகுலம் பள்ளி மாணவர்.
 *ஈரோடு மாவட்டம் ஏலவாமலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகியோர், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
 *மதுரை பி அண்ட் டி நகரைச் சேர்ந்த மாணவர் சுகைல் அகமது, 199.75 'கட் - ஆப்' எடுத்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனப் பிரிவிலும்; சேலம் ஆத்துாரைச் சேர்ந்த இசைப்பிரியா, 199.25 எடுத்து, ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவிலும்; கொல்லிமலையைச் சேர்ந்த தனசேகர், 197.50 எடுத்து, பழங்குடியினர் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர். *தொழிற்கல்விப் பிரிவில், கோவை காராமடையைச் சேர்ந்த மனோஜ், முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு, சிக்கரசம் பாளையம் தினேஷ் குமார்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ரோகிந்த் போஸ் ஆகியோர் முறையே, மூன்று, நான்காம் இடங்களை பெற்றுள்ளனர். முழுமையான தர வரிசைப் பட்டியல், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்ஜி., படிப்புக்கு மாணவியர் 'குட்பை': 
இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.50 லட்சம் பேரில், 57,990 பேர் மாணவியர். ஆனால், இந்த ஆண்டு தர வரிசைக்கான முதலிடம் பட்டியலில், மாணவியர் மிக சொற்பமாகவே இடம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு பிளஸ் 2வில், உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், அந்தப் பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.அதனால், 'கட்- ஆப்' மதிப்பெண்ணும் குறைந்து விட்டது. கணிதம், பயாலஜி படித்த மாணவியரில், 195 முதல், 200 வரை, 'கட் - ஆப்' பெற்றவர்கள் மருத்துவம் நிச்சயம் கிடைக்கும் என்று அதற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், இன்ஜினியரிங் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.அதேநேரம், இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில், 190க்குக் கீழ் அதிக மாணவர்கள், 'கட் - ஆப்' பெற்றுள்ளதால், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரித் தேர்வில் கடும் போட்டி இருக்கும்.இந்த ஆண்டு, 22,500 பேர், 190 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 21,280 பேர் பெற்றனர்.இந்த ஆண்டு, 28,129 பேர், 188 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 26,300 பேர் தான் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு