Skip to main content

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு
பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 பள்ளிகளில் படிக்கும் 60 லட்சம் முதல் 70 லட்சம் மாணவ- மாணவிகளின் விவரங்களை ஆதாரில் இணைக்க வேண்டி யிருப்பதால் பள்ளிகளில் அதற் காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் விவரங் களை உரிய படிவத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாய மாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு