Skip to main content

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு
பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 பள்ளிகளில் படிக்கும் 60 லட்சம் முதல் 70 லட்சம் மாணவ- மாணவிகளின் விவரங்களை ஆதாரில் இணைக்க வேண்டி யிருப்பதால் பள்ளிகளில் அதற் காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் விவரங் களை உரிய படிவத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாய மாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்