Skip to main content

இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்


Image result for iti photosதனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) ஆண்டுத் தேர்வுகளை இணையதள வழியில் நடத்த மத்திய அரசின் தொழில் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
 மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிற்பயிற்சிகள் இயக்குநரகத்தின் தலைவர்
டி.மாலிக் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கைவினைஞர் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் துறை இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 அகில இந்திய அளவிலான தொழிற்பயிற்சித் தேர்வுகள் இப்போது மத்திய அரசின் என்.சி.வி.டி. நிறுவனத்தின் மேற்பார்வையில் இணையவழி அல்லாத முறையில் நேரடியாக நடத்தப்படுகிறது.

 இந்தத் தேர்வு முறை நடத்த அதிக கால அளவு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், முடிவுகளை வெளியிட குறைந்தது 50 நாள்களுக்கு மேலாகிறது. இந்தத் தேர்வுகளில் மனிதக் குறுக்கீடுகளால் பிழைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்படும் சிறிய தவறுகளால் கேள்வித்தாள்கள் வெளியாகும் நிலையும் ஏற்படுகின்றன.
 இந்தப் பழைய முறையிலான தேர்வு முறையில் ஏற்படும் பிரச்னைகளைக் களைய தொழிற்பயிற்சித் துறையின் ஆண்டுத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் இணையதள வழிக் கணிணி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மிக குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட இயலும்.
 எனவே, இந்த இணையதள வழிக் கணினிகளால் பருவத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் நடத்துவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்து அறிக்கைகளை ஜூன் 26-க்குள் புதுதில்லியில் உள்ள தொழிற்பயிற்சிகள் துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
 இந்த அறிக்கையில் இணையதள வழித் தேர்வு எழுதத் தகுதியானவர்களாக தங்களது மாநிலத்தில் தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர்கள் உள்ளனரா எனக் குறிப்பிட வேண்டும்.
 இதுதவிர, தங்களது மாநிலத்தில் இணையதள வழித் தேர்வுகள் நடத்த அனுகூலமான சூழ்நிலை உள்ளதா, இருக்கிறது எனில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா, இணைய தள வழித் தேர்வுகள் நடத்த உள்கட்டமைப்பு வசதிகள் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ளதா அல்லது வேறு ஏதாவது பயிற்சி நிலையங்களில் இணையதளத் தேர்வுகள் நடத்த வசதிகள் உள்ளதா என்பன குறித்த விவரங்களுடன் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு