Skip to main content

ஹெல்மெட் அணியலையா: நீதிமன்றம் அலைய தயாரா?


         'ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில், அதை அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றுகளின் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

            இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். மீ
றினால் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்; ஆவணங்களின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

            அசல் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 207ன்படி டூவீலர் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும். அதற்கான ஒப்புகை சீட்டு உரிமையாளருக்கு வழங்கப்படும்.பின், உரிய அசல் ஆவணங்களை, போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டுடன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

பின், வாகனம் விடுவிக்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அசல் ஆவணங்கள் மேல்நடவடிக்கைக்காக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.ஐ.எஸ்.ஐ., தரமுடைய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், மோட்டார் வாகன சட்டப்படி அசல் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.

ஜூலை 1 முதல் கோர்ட்டிற்கு அலைய போகிறீர்களா அல்லது ஹெல்மெட் வாங்கி உங்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறீர்களா?

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா