Skip to main content

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்,பயிலும்
கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்தசிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015 - 2016ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறும் மாணவ, மாணவியரது பெற்றோர், பாதுகாவலரதுஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்கவேண்டும். மாணவ, மாணவியர் முந்தையஆண்டின் இறுதித் தேர்வில் (முதல் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல்பெற்று தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் நலவாரியங்கள் மூலம், 2015 - 2016ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.முதல் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புமாண, மாணவியர் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களைwww.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்துதாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளமுகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தவிர, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, இணைக்கவேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, அப்லோடு செய்யவேண்டும். விண்ணப்பித்தபின், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையத்தில், அடுத்த மாதம், 31ம் தேதிக்குள்சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கானவிபரங்களை அதற்கான கேட்புப் பட்டியலில் பதிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம், அடுத்த மாதம், 25ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும்.
ஒன்பதாம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம், அடுத்த மாதம், 31ம்தேதிக்குள் பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு