Skip to main content

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்,பயிலும்
கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்தசிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015 - 2016ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறும் மாணவ, மாணவியரது பெற்றோர், பாதுகாவலரதுஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்கவேண்டும். மாணவ, மாணவியர் முந்தையஆண்டின் இறுதித் தேர்வில் (முதல் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல்பெற்று தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் நலவாரியங்கள் மூலம், 2015 - 2016ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.முதல் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புமாண, மாணவியர் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களைwww.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்துதாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளமுகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தவிர, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, இணைக்கவேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, அப்லோடு செய்யவேண்டும். விண்ணப்பித்தபின், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையத்தில், அடுத்த மாதம், 31ம் தேதிக்குள்சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கானவிபரங்களை அதற்கான கேட்புப் பட்டியலில் பதிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம், அடுத்த மாதம், 25ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும்.
ஒன்பதாம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம், அடுத்த மாதம், 31ம்தேதிக்குள் பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா