Skip to main content

தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்


தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர். இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா, விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது. இதனால் தமிழ்மொழிக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க நிதித்துறைச் செயலர்
29.11.2012ல் உத்தரவிட்டார். டிஎன்பிஎஸ்சி விதிகளை மீறியதற்காக, 24.8.2012 முதல் 5 ஆண்டுக்கு அரசு பணியாளர்  தேர்வுகளில் பங்கேற்க தமிழ்மொழிக்கு தடை விதித்து 2013ல் தேர்வாணையம் உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தமிழ்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: தேர்வாணையம் 2012 முதல் 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு தேர்வுகளில் பங்கேற்க மனுதாரருக்கு தடை விதித்துள்ளது. மனுதாரர் செய்த தவறை சாதாரணமாக கருத முடியாது. மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்கினாலும் முக்கிய பணிகளில் நியமிக்கக் கூடாது. அப்படி செய்தால் அரசு ஆவணங்களை திருத்துவதற்கு வாய்ப்புள்ளது. மனுதாரர் தண்டனையில் இருந்து தப்பிய போதிலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா