Skip to main content

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில்,
மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில் இலவச இடங்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இலவச இட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் டttணீ:/tணட்ச்tணூடிஞிண்ஞிடணிணிடூண்.ஞிணிட்/ இணையதளத்தில் இலவச இடங்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.


இதில் 32 மாவட்டங்களிலுள்ள 3,720 பள்ளிகள் இடம் பெற்றன. சென்னையில் 371 தொடக்கப் பள்ளிகளில் 11,130 இடங்களில் 2,903 இடங்களில் இலவச சேர்க்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை இலவசமாக பெறலாம். அதை உரிய ஆவணங்களுடன் நிரப்பிக் கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.'பள்ளிகள் தவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்' என மெட்ரிக்இயக்குனரகம் அறிவித்துள்ளது.விண்ணப்பப் பரிசீலனை விண்ணப்பத் தேர்வு குலுக்கல் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதியை மெட்ரிக் இயக்குனரகம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா