Skip to main content

அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி களி
ல், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு, 1.90 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வாங்கினர். இதில், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 545 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலனை முடிந்து, மாணவர்களுக்கான சமவாய்ப்பு, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, 'ரேண்டம் எண்' வெளியீடு துவங் கும் என, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்து உள்ளார்.


இந்த எண், அந்தந்த விண்ணப்ப எண்களுடன், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி, 'கட் - ஆப்' அடங்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 'ரேண்டம்' எண், சில மாணவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை என்ற பிரச்னையை சமாளிக்க, இந்த முறை பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 1.90 லட்சம் பேரில், ஐந்து பேருக்கு மட்டுமே, 'ரேண்டம் எண்' பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டது.

கணக்கீடு எப்படி?

முதலில் கணிதத்தில் யார் அதிக மதிப்பெண் என, பார்க்கப்படும். அதில், சமமாக இருந்தால் இயற்பியல்; அதில் சமமாக இருந்தால் வேதியியல், பின், நான்காம் பாட மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதில், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். நான்கு பாடங்களிலும் மதிப்பெண் சமமாக இருந்தால், பிறந்த தேதி சரிபார்க்கப்பட்டு, மூத்தவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம் எண்' பயன்படுத்த முடிவு செய்யப்படும். இந்த ரேண்டம் எண்ணில் யார் அதிக எண்ணிக்கை பெறுகிறாரோ, அவருக்கு தர வரிசையில் முன்னுரிமை கிடைக்கும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா