Skip to main content

அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை


'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் சார்பில், அனைத்து
அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன.
தாமதம் வாடிக்கை:
அதில் கூறப்பட்டுள்ளதாவது:நேரம் தவறாமையை, மத்திய அரசின் ஒவ்வொரு ஊழியரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பல ஊழியர்கள், அலுவலகங்களுக்கு தொடர்ந்து தாமதமாக வருவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும், உயரதிகாரிகளில் இருந்து, 
சாதாரண ஊழியர்கள் வரை, வருகைப்பதிவு குறித்த விஷயத்தில், நேரம் தவறாமையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
அறிவிப்புகள் அவசியம்:
பணிக்கு வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குறித்த நேரத்திற்கு அலுவலகம் வருவதை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக, குறிப்பிட்ட கால 
இடைவெளிகளில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, பயோ - மெட்ரிக் தொழில்நுட்பம் மூலம், ஊழியர்கள் வருகையை பதிவு செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. தற்போது, வருகைப் பதிவேட்டு புத்தகத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கையெழுத்திடுவதன் மூலம், வருகை, பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு பதிலாக, பயோ - மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வருகை பதிவேடு இணையதளம்:
* ஊழியர்களின் அன்றாட வருகை பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 
*இதில், பயோ - மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும், 1.30 லட்சம் ஊழியர்களின் வருகை பதிவேட்டு விவரம் இடம் பெற்றுள்ளது. 
*தற்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அரசு ஊழியர், ஒரு மாதத்துக்கு, இருமுறை மட்டும், அலுவலகத்துக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். 
* இதற்கு மேல் தாமதமாக வந்தால், அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையில், அரை நாள் கழிக்கப்படும். 
*நியாயமான காரணங்களுக்காக தாமதமாக வர நேரிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் பொறுப்பு, அவர்களின் உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு