Skip to main content

கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை (23ம் தேதி) கவுன்சிலிங் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கு விரைவில் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எதிர் கால கனவுகளுடன் கவுன்சிலிங் அறையில்
நுழையும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் குறித்து நிறைய சந்தேகங்கள் தோன்றும்.

எனவே, அவர்களின் சந்தே ககங்களை தீர்க்க, கவுன்சிலிங் நடை முறைகள் குறித்து சென்டாக் அதிகாரிகளின் விளக்கம்:
கால் லெட்டர் வரவில்லை. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியுமா?
சென்டாக் இணைய தளத்தில் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம். கால் லெட்டர் வர வில்லையெனில், கவுன்சிலிங் நடக்கும் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் வரும் போது எந்தெந்த சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்?
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஒருங்கிணைந்த ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஒரிஜனல் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் நகல்களை ஒரு செட் எடுத்து வர வேண்டும்.
கவுன்சிலிங் கட்டணம் எவ்வளவு?
பொது பிரிவு உட்பட ஏனைய பிரிவினர் 850 ரூபாய்க்கு, கன்வீனர், சென்டாக் என்ற முகவரியில் புதுச்சேரியில் மாற்றத் தக்க வகையில் டி.டி., எடுத்து வர வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 350 ரூபாய்க்கு எடுத்தால் போதும். டி.டி.,இல்லாமல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது.
கவுன்சிலிங்கிற்கு வந்துவிட்டு, எந்த கல்லுாரியையும் தேர்வு செய்ய விருப்பமில்லை என்றால் கவுன்சிலிங் கட்டணம் திரும்ப கிடைக்குமா?
முதற்கட்ட கவுன்சிலிங் எந்த கல்லுாரியிலும் இடங்களை தேர்வு செய்யவில்லை என்றால் டி.டி.,கட்டணம் திரும்பி அளிக்கப்படும். அதன் பிறகு நடக்கும் கவுன்சிலிங் பங்கேற்றால் கவுன்சிலிங் கட்டணம் திரும்பி கிடைக்காது.
கவுன்சிலிங்கிற்கு பெற்றோர் இல்லாமல் கலந்து கொள்ள முடியுமா?
கவுன்சிலிங்கில் மாணவர் மட்டும் தனியாக சீட் எடுக்க முடியாது. தாய், தந்தை அல்லது சட்டபடியான பாதுகாவலரை உடன் அழைத்து வர வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக கவுன்சிலிங் மாணவர் பங்கேற்க முடியாவிட்டால்....
அதற்கு அடுத்த நாட்களில் அந்த மாணவர் கவுன்சிலிங்கிற்கு வரலாம். அதே சமயம் ஏற்கனவே இருந்த காலியிடங்களை குறிப்பிட்டு உரிமை கோர முடியாது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் நேரத்தில் உள்ள காலி இடங்களில் இருப்பதில் விருப்பமானத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வந்துள்ளது, ரேங்க் பட்டியலில் மாற்றம் செய்ய கொடுக்கலமா?
நிச்சயமாக கொடுக்கலாம். அதற்குகேற்ப தரவரிசை பட்டியல் மாறும். மறு மதிப்பீட்டு மதிப்பெண் சான்றிதழை சென்டாக் அலுவலத்தில் சமர்பித்து, அந்த கட் ஆப் மதிப்பெண் ஏற்றவாறு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் காலி இட நிலவரங்களை தெரிந்து கொள்வது எப்படி?
கவுன்சிலிங்கின் போது எந்த கல்லுாரியில் எந்த படிப்புகளில் இடங்கள் காலியாக உள்ளன என்ற விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.
ஒவ்வொரு நாளும் இரவில் கவுன்சிலிங் முடிவிலும் காலியிட நிலவரம் புதுப்பிக்கப்படும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளில் இடம் இருக்கிறதா என இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சென்டாக் இணையதளம்: www.centacprof.net.in

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு