Skip to main content

முதல் தலைமுறை பட்டதாரியாக விரும்புவோர் 80 ஆயிரம்


அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில், மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்; இதில், கணிதம் மற்றும் அறிவியல்
பிரிவில், 1.51 லட்சம் பேர்; தொழிற்கல்வி பிரிவில், 3,104 பேர் இடம்பெற்று உள்ளனர். விளையாட்டுப் பிரிவில், 1,472 மாணவர், 595 மாணவியர் என, 2,067 பேர்; மாற்றுத்திறனாளிகளில், 246 மாணவர், 102 மாணவியர் என, 348 பேர்; முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரில், 1,213 மாணவர், 902 மாணவியர் என, 2,115 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த, மூன்று சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளில், 4,530 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில், 150 இடங்கள்; மாற்றுத்திறனாளிகள், 3 சதவீதம்; விளையாட்டுப் பிரிவினருக்கு, 500 இடங்கள் ஒதுக்கப்படும்.
மொத்தமுள்ள விண்ணப்பங்களில், 52 சதவீதம் அளவுக்கு, 80,446 பேர், தங்களை முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்; இவர்களில், மாணவர், 52,197 பேர்; மாணவியர், 28,249 பேர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா