Skip to main content

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்


கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடு இன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை
செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.

கவுன்சிலிங் அரங்கில் 18 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காலியிடங்கள் விவரத்தை அறிய மிகப்பெரிய மின்னணு திரைகள் உள்ளன.மாணவர்கள் மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக 50 பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அண்ணா பல்கலையின் மாணவர் குழு இயக்கும். அவர்கள் கல்லுாரிகளை பற்றி மாணவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார்கள்.

கவுன்சிலிங் அரங்கிற்குள் 150 ஊழியர்கள்; 50 பேராசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் கவுன்சிலிங் பணிகளில் ஈடுபடுவர். கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு முன்னறிவிப்பு அறிவுரை கூட்டம் நடக்கும்.கவுன்சிலிங் தினமும் எட்டு பிரிவுகளாக நடக்கும்; ஒவ்வொரு பிரிவிலும் 500 - 800 பேர் வரைகல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தில் 'பார்கோட்' வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணினி பதிவுகளில் திருத்தம் தேவைப்பட்டால் மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு முன் திருத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா