Skip to main content

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின


கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.  இதில்
சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இந்த பிரிவில் கலந்துகொள்ள 52 பேர் அழைக்கப்பட்டனர்.  கலந்தாய்வில் 32 இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. 7ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.  ஜூலை 27ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா