Skip to main content

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின


கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.  இதில்
சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இந்த பிரிவில் கலந்துகொள்ள 52 பேர் அழைக்கப்பட்டனர்.  கலந்தாய்வில் 32 இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. 7ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.  ஜூலை 27ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு