Skip to main content

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின


கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.  இதில்
சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இந்த பிரிவில் கலந்துகொள்ள 52 பேர் அழைக்கப்பட்டனர்.  கலந்தாய்வில் 32 இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. 7ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.  ஜூலை 27ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்