Skip to main content

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

இந்த ஆண்டு முதல் பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள் ஆகிறது: என்சிடிஇ உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டு
மானால் குறிப் பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப் பதுடன் பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற வேண்டும். இதுவரையில் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அமைப்பானது பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த் தப்படும் என்று அண்மையில் அறிவித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.

பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் சூழல் உருவான நிலை யில், அதற்குரிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மேற்கொண்டது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் என்சிடிஇ உத்தரவின்படி பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? அல்லது தொடர்ந்து ஓராண்டாகவே நீடிக்குமா? என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இதற்கிடையே, ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் தயாரித்த 2 ஆண்டு கால பாடத்திட்டத்துக்கு அதன் சிண்டிகேட் குழு கடந்த மே மாதம் 20-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலை யில், என்சிடிஇ வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் விதிமுறைகளை (பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதி கரிப்பு) 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரி களிலும் நடை முறைப்படுத்துமாறு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசா ணையை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா நேற்று முன் தினம் (18-ம் தேதி) வெளியிட்டார்.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழக கல்விக்குழு வின் கூட்டம் பல்கலைக்கழக அலுவல கத்தில் நேற்று நடந்தது. கல்விக்குழு தலைவரான துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்களான கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன் உள்பட 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பி.எட். படிப்பு காலத்தை 2015-16 கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டதாக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் ‘தி இந்து’ விடம் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பி.எட். படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி காலம் 40 நாட்களாக இருந்தது. இனி மேல் அது 20 வாரங்களாக இருக்கும். முதல் ஆண்டில் 6 வாரங் களும், 2-ம் ஆண்டில் 14 வாரங்களும் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏதாவது ஒரு பள்ளியில் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவர். கற்பித்தல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அத்துடன் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன் படுத்தி பாடம் நடத்துதல், விளையாட்டு, யோகா, கலை மற்றும் கைவினை போன்றவற்றுக்கும் அதிக முக்கியத் துவம் தரப்படும். 2015-16-ம் கல்வி ஆண் டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு