அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும். இதற்காக, வரும் 28ம் தேதி, சென்னை, மதுரை
, கோவை, நெல்லை, திருச்சி என, ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது.
மேலும், விவரங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, எம்.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.