Skip to main content

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு

சென்னை பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.
மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும்
மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள். தற்போது அண்ணா நகரில் உள்ள ராங்கி மார்ஸ் நிறுவனத்தார் பிளஸ் – 2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் வினா – விடைகளை சி.டியாக தயாரித்து உள்ளார்கள்.


10–ம் வகுப்பு மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் 10–ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் உரிய வினா – விடைகள் எளிதில் புரியும் வண்ணம் சி.டியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இது போல் 12–ம் வகுப்புக்கான இயற்பியல், வேதியில், தாவரவியல், உயிரியல் பாடங்களின் வினா – விடைகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சி.டிக்களாக தயாரிக்கப்பட்டு உள்ளது. ராங்கி மார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிடி வெளியீட்டு விழா வருகிற 29–ந் தேதி காலை 6 மணிக்கு அண்ணாநகரில் நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு வினா – விடை சிடியை வெளியிடுகிறார். இது குறித்து அண்ணாநகர் ராங்கி மார்ஸ் சிறப்பு பயிற்சி மற்றும் ஹைடெக் அகாடமியின் மானேஜிங் டைரக்டர் சிவபிரகாசம் கூறுகையில், 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிதில் புரியும் வகையில் வினா – விடைகளை சிடியாக உருவாக்கி உள்ளோம். தகுதி, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை பயன்படுத்தும் மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி என்று கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்