Skip to main content

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு) கலந்து கொள்ள அழை
ப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1-ம் தேதி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 403 வரை இடம் பெற்றவர்களும், 2-ம் தேதி 404 முதல் 916 வரையிலும், 3-ம் தேதி 917 முதல் 1400 வரையிலும், 5-ம் தேதி 1407 முதல் 1850 வரையிலும் இடம் பெற்றவர்களுக்கு கலந்தகாயவு நடைபெறுகிறது. எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஜூலை 4-ம் தேதி எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாகப் பெற்றவர்கள் பிரிவில் 1 முதல் 517 வரை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்க பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் உரிய தேதியில் உரிய தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2552238.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன