Skip to main content

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு) கலந்து கொள்ள அழை
ப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1-ம் தேதி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 403 வரை இடம் பெற்றவர்களும், 2-ம் தேதி 404 முதல் 916 வரையிலும், 3-ம் தேதி 917 முதல் 1400 வரையிலும், 5-ம் தேதி 1407 முதல் 1850 வரையிலும் இடம் பெற்றவர்களுக்கு கலந்தகாயவு நடைபெறுகிறது. எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஜூலை 4-ம் தேதி எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாகப் பெற்றவர்கள் பிரிவில் 1 முதல் 517 வரை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்க பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் உரிய தேதியில் உரிய தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2552238.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்