Skip to main content

தனியார் பள்ளிகளில் 19 குழுக்கள் மூலம் ஆய்வு பணி

தனியார் பள்ளிகளில் 19 குழுக்கள் மூலம் ஆய்வு பணி! 4 நாட்களில் ஆய்வறிக்கை அளிக்க முடிவு
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு குறித்து குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகள், 25
சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான கல்வி கட்டணத்தை, அரசே வழங்கும் என்று இரண்டு ஆண்டுக்கு முன், தமிழக அரசு அறிவித்தது.ஆனால், அரசு கல்வி கட்டணத்தை முறையாக வழங்கவில்லை. பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, நிலுவை தொகை வைத்துள்ளது என்று கூறி, இந்தாண்டு முதல் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவ, மாணவியரை சேர்க்க மாட்டோம், என்று, தனியார் பள்ளிகள் கூட்டாக அறிவித்தது.இந்நிலையில், கல்வி கட்டண தொகையை வழங்க அரசு முன் வந்தது.
முன்னதாக, மாவட்டந்தோறும், இடஒதுக்கீடு முறையில் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி தரத்தை அறிய, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வி பயில்கின்றனரா? கல்வி கட்டண நிலுவையால், தனியார் பள்ளிகள் மாணவ, மாணவியரை நிறுத்தி வைத்துள்ளனரா? அல்லது தானாகவே முன் வந்து டி.சி.,யை வாங்கி கொண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க நிர்பந்தபடுத்தினர்களா? என்பது குறித்த புகார் எழுந்துள்ளது.

மேலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தவர்கள் என்பதால், நடைமுறையில் கல்வி கற்க, ஏதேனும் சிக்கல் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்து, கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் நிலை குறித்த விவர அறிக்கையை சேகரிக்குமாறு, பள்ளி கல்வித்துறை மூலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ, மாணவியர் குறித்த தகவல், எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து, 15ம் தேதி முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுவில் இடம் பெற்று உள்ளவர்களுக்கு, கூட்டம் நடந்தது. இக்குழுவினர், நேற்று ஆய்வு பணியை துவக்கினர்.

ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: ஒரு குழுவில் உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், வட்டார வள மைய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் என நால்வர் உள்ளனர். 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆய்வை இன்று (நேற்று) துவக்கினர்.வரும், 19ம் தேதிக்குள் ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பயிலும் மாணவ, மாணவியரின் நிலை குறித்து ஆராயப்படும். அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கின்றனரா? வேறு பள்ளிக்கு சென்று விட்டனரா? பள்ளியை மாற்றி கொள்ள உத்தேசித்து உள்ளனரா? என்பது குறித்து ஆராயப்படும்.குழுவின் ஆய்வறிக்கையை பெற்றவுடன், இறுதி அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு, அரசு விரைந்து வழங்கும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு