Skip to main content

தமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி


தமிழகத்தில் 13 அரசு கலைக் கல்லுாரிகளில் 61 புவியியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15
அரசு கலைக் கல்லுாரிகளில் புவியியல் பாடப்பிரிவு உள்ளது. இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதில் திருச்சி ஈ.வெ.ரா., கல்லுாரியில் 9 பணியிடங்கள், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி, திருச்சி அரசு கல்லுாரியில் தலா 8, திண்டுக்கல் எம்.வி.எம்.,அரசு மகளிர் கல்லுாரி, நாமக்கல் அரசு கல்லுாரியில் தலா 6.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில் 5, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் 3, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி, சென்னை ராணி மேரி கல்லுாரி, கோவை அரசு கல்லுாரியில் தலா 4, சேலம் அரசு கல்லுாரியில் 2, சென்னை மாநில கல்லுாரி, கரூர் அரசு கல்லுாரியில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாததால் நெட்,' 'ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், முனைவர் பட்டம் பெற்றோர் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ல் புவியியல் பாடத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. பல காரணங்களால் இதுவரை நிரப்பப்படவில்லை. தற்போது காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ரூ.10 ஆயிரம் மாத
ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு பணிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு