Skip to main content

தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவு


விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோ
றும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை யொட்டி விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த முகாமில், மனதை அமைதிபடுத்தும் முறை, சுவாச பயிற்சி, கை, கால் அசைவுகள் உட்பட பல யோகா சார்ந்த பயிற்சிகளை ஈஷா யோகா பயிற்சியாளர் ஆனந்தமூர்த்தி வழங்கினார். இதில் 200 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் பத்மநாபன் பார்வையிட்டனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன